சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.