திருச்சி மாவட்டம், முசிறியில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் சிட்டிலரை கைகாட்டி பிரிவு சாலை முதல் பெருமாள்பாளையம் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.