விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் சிறு,சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர்.வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.