ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் இருந்து மேட்டூர் ரோடு செல்லும் வளைவில் கடந்த பல நாட்களாக பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?