திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பழையகாயல் சிர்கோனியம் முதல் முள்ளக்காடு வரையிலும் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதுடன், சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளையும் அகற்ற வேண்டுகிறேன்.