கொடுமுடி பெருமாள்கோவில்புதூர் அருகே உள்ள ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு் செல்கின்றனர். விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.