வேகத்தடை தேவை

Update: 2024-07-14 12:59 GMT
பண்ருட்டியில் இருந்து வி.ஆண்டிக்குப்பம், புதுப்பேட்டை மற்றும் கணிசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனைவரும் மணி நகர் வழியாகத்தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பிரதான சாலையில் வேகத்தடை ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்