கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-07-14 12:59 GMT
விருத்தாசலம் அருகே க.இளமங்கலம் கிராமத்தில் இருந்து நாி ஓடை தடுப்பணைக்கு செல்லும் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. இதையடுத்து அங்கு புதிதாக சாலை அமைக்க ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பணிகள் முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்