வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2024-06-16 11:32 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமம் முருங்கப்பேட்டை பங்களா பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் மிக வேகமாக செல்வதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வயதானவர்கள் மற்றும் பணிக்கு செல்பவர்கள் சாலையைக் கடப்பதில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையை கடந்து செல்லும்போது சில சமயங்களில் எதிர்பாராத விபத்துகளும் ஏற்படுகிறது. ஆகவே இதனை தவிர்க்கும் பொருட்டு சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்