கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2024-04-07 17:49 GMT
குமராட்சி அருகே வடக்கு கொளக்குடி ஓ.என்.ஜி.சி. தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதையடுத்து அங்கு புதிதாக சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்