புதிய தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2023-12-17 10:52 GMT

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா கோப்பு கிராமத்தில் உள்ள கள்ளுக்காடு வாரி பாலத்தில் இருந்து எட்டரை கிராமம் ஒத்தக்கடை பகுதிக்கு செல்லும் சாலையானது மண் சாலையாக உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்