குண்டும், குழியுமான சாலை

Update: 2023-10-29 11:42 GMT

திருச்சி மாவட்டம், அதுவத்தூர் பனையடியான் கோவிலில் இருந்து அதவத்தூர் பாளையம் செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை புதுப்பித்து, தெருவிளக்கு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்