புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-10-15 18:05 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே இருதயபுரம் கிராமத்திலிருந்து உருத்திர சோலை செல்லும் வழியில் புதிதாக சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இருப்பினும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் மேற்கொண்டு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்த செய்தி தினந்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தினத்தந்திக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்