சேறும், சகதியுமான சாலை

Update: 2023-10-01 17:16 GMT
குமராட்சி அருகே எடையார் கிராமம் தெற்கு தெருவில் உள்ள சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நத்தை வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலை உள்ளதால், கால விரையம் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்