கால்வாய், சாலை வசதி தேவை

Update: 2022-09-16 11:03 GMT

கலசபாக்கம் தாலுகா சேங்கப்புத்தேரி ஊராட்சி எள்ளுப்பாறை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எங்கள் கிராமத்தில் போதிய சாலை இல்லை. மழைப் பெய்தால் மழைநீர் தேங்கி வடியாமல் தெரு சாலையில் பல மாதங்களாக தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. அந்த வழியாக முதியோர், பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகின்றனர். வாகனங்களிலும் செல்ல முடியவில்லை. எங்கள் பகுதிக்கு கால்வாய் மற்றும் சாலை வசதியை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.முருகன் சமூக ஆர்வலர், எள்ளுப்பாறை. 

மேலும் செய்திகள்