விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த மங்கபுரம் அருகே ராஜா நகரில் சாலை வசதி கிடையாது. இதனால் மழை பெய்தால் சாலையில் நீரானது தேங்கி அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மேலும் தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் முறையான சாலைவசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.