விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம்மாள் நகரில் சாலை வசதி இல்லை. லேசாக மழை பெய்தால் கூட அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் அந்தப்பகுதியில் மின்வயர்களும் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபரீதம் எதுவும் நேர வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்வயர்களை சரி செய்வதுடன், சாலை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.