இணைப்பு சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-19 16:14 GMT
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலையில் பெரம்பலூர் போலீஸ் நிலையம் அருகே இருந்து செல்லும் சாலையில் இருபுறமும் வணிக வளாகங்கள் உள்ளது. மேலும் அதனருகே உழவர் சந்தையும் உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படுவதால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே உழவர் சந்தை அருகே உள்ள இடத்தின் வழியாக காமராஜர் வளைவுக்கு செல்வதற்கு இணைப்பு சாலை ஏற்படுத்தினால் போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்