பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே புஞ்சவயல் விநாயகர் கோவில் முதல் கொளப்பள்ளி செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கிழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.