குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-08-11 12:47 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த நத்தம் திருநன்றியூர் காலனி தெருவில் இருந்து பெரிய தெரு செல்லும் சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்