நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஊட்டி எட்டின்சஸ் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.