குண்டும்,குழியுமான சாலை

Update: 2022-08-08 11:00 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த விசலூரில் உள்ள சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்