பல்லாங்குழியான சாலை

Update: 2022-08-06 07:00 GMT

சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு முதல் கோவிலாம்பூண்டி வரையிலான சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் இவ்வழியாக பி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற வகையில் பல்லாங்குழி போல் காணப்படும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்