சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-08-05 16:13 GMT
தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் இருந்து ரெட்டிபாளையம் செல்லும் சாலை பெரியார்நகர் பகுதியில் ரெங்கோடையான் ஏரிக்கரை உள்ளது. இந்த ஏரிக்கரையோரம் அருகே உள்ள சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் ஏரிக்கரையோர சாலையில் ஆபத்தான பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்