நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-30 13:58 GMT
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிறுத்ததில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடை தற்போது போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. நிழற்குடையில் உள்ள மின்விசிறிகள், விளக்குகள் ஒளிருவது இல்லை. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. சிலர் பயணிகள் நிழற்குடை உள்ளே அமர்ந்து மதுகுடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும்பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் நிழற்குடையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்