சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-09-03 10:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை ரோடு பகுதி சின்னத்தம்பி நகர் முதல் காமாட்சி நகர் வரை சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்