நான்கு ரோடு சந்திப்பில் சிக்னல்

Update: 2022-07-25 13:19 GMT

பாலக்கோடு தாலுகாவில் பிரசித்தி பெற்ற புதூர் மாரியம்மன் கோவில் அருகில் (தர்மபுரி-ஒசூர்) நான்கு ரோடு பை பாஸ் சந்திப்பு அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சந்திப்பில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காத்தவராயன், பாலக்கோடு.

மேலும் செய்திகள்