சாலை வசதி வேண்டும்

Update: 2022-07-25 10:35 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் மேமாத்தூரை அடுத்த வாழ்க்கை கிராமத்தில் இறந்தவர்களின் உடலை மயானத்துக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.  மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், மண்பாதை முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் மயானத்துக்கு எடுத்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர ச நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்