குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-23 10:35 GMT

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி 7-வது வார்டில் கட்டபொம்மன் வீதி, ராணி அண்ணா வீதியில் உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்தால் அங்குள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதோடு மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்