சாலை சீரமைப்பு தொடங்கியது

Update: 2022-07-24 12:52 GMT

தர்மபுரி-பாலக்கோடு சாலையில் கடமடை அருகே அகரம் செல்லும் சாலை பிரிகிறது. குண்டும் குழியுமாக காணப்பட்ட இந்த தார்சாலையால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர். குண்டும், குழியுமான சாலை  போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணி தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி' க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா.

-விஜய், பாலக்கோடு.

மேலும் செய்திகள்