தார்ச்சாலை வேண்டும்

Update: 2022-07-24 12:33 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த செம்பனார்கோவில் பகுதி மேமாத்தூர் காசான் தட்டை கன்னி கோவில் தெருவில் உள்ள சாலை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்