சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-23 16:37 GMT
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி -பூதலூர் நெடுஞ்சாலையில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.இந்த பாலத்தின் வழியாக தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை,பூண்டிமாதா பேராலயம் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்