குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-25 12:33 GMT
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், புடலாத்தி கிராமத்தில் இருந்து வெங்கடாசலபுரம் கிராம் வழியாக செல்லும் சுமார் 5 கிலோ மீட்டர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்