கரடு. முரடான சாலையால் அவதி

Update: 2022-07-22 14:21 GMT

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து வல்லம்படுகை வரை உள்ள சாலை கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ஆகவே போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் உள்ள அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

மேலும் செய்திகள்