சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2023-05-14 15:24 GMT

புதுச்சேரி இந்திராகாந்தி சிலை முதல் மூலக்குளம் வரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ரெட்டியார்பாளையம் பகுதியில் செயல்படும் வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால் வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் சாலைகளிலேயே கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அதிகளவில்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு தகுந்த நடவடிக்கைளை அதிகாரிகள் எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்