பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளம் கிராமத்தில் இருக்கும் குன்னுமேடு தெரு சாலை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்பகுதி மக்களின் ஆக்கிரமிப்பால் தார்சாலை மறைந்து ஓடையாக காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.