புதிய சாலை அமைக்க கோரிக்கை

Update: 2023-03-29 14:01 GMT
கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தாயனூர் வரை புதிய, பழைய கட்டளை மேட்டுவாய்கால் இனுங்கூர் வழியாக செல்கிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இனுங்கூரில் இருந்து நச்சலூர் பகுதிக்கு சென்று வருவதற்கு வாய்க்கால் நடுக்கரையில் பல வருடங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் நச்சலூரில் இருந்து இனுங்கூருக்கு சென்று வருகின்றன. இந்த தார்சாலை தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்