
ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீஸ் நிலைய குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரியின் பிணவறை உள்ளது. அங்கு இறந்தவர்களின் உறவினர்கள் கூடுவதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அந்த சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்