சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-02-01 16:02 GMT

திருக்கனூர் கடைவீதியில் இருந்து சித்தலம்பட்டு ஏரிக்கரை வழியாக செட்டிப்பட்டு செல்லும் சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இறைச்சி கழிவுகள் சாலையோரம் வீசுவதை தடுக்க கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்