வேகத்தடைகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-13 12:51 GMT

திருச்சி மாவட்டத்தில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது துறையூர். இது மிகப்பெரிய நகரம் மற்றும் தாலூகாவாகும். சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துறையூரினை சுற்றி அமைந்துள்ளன. துறையூர் மற்றும் அருகில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளவர்கள் தங்கள் உடல் சார்ந்த மருத்துவத்திற்கு துறையூரில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு சில கடினமான சிகிச்சை முறைகள் துறையூரில் அளிக்க வசதி இல்லாததால் மேற்படி நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட தலைநகரமான திருச்சிக்கு செல்கிறார்கள். விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறிப்பாக தலைக்காயம் அடைந்தவர்களுக்கு துறையூரில் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிகள் இல்லாததால் அவர்களை உடனடியாக திருச்சிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்கிறார்கள். முன்பெல்லாம் துறையூரிலிருந்து திருச்சி அரைமணி நேரத்தில் நோயாளிகளை ஆம்புலன்சில் கொண்டு சென்று போய் சேர்த்தார்கள் தற்போது துறையூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் 42 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நொச்சியம் வரை 24 வேகத்தடைகள் அமைத்ததுள்ளார்கள். இதில் மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்திலிருந்து நொச்சியம் வரையில் மட்டும் 11 வேகத்தடைகள் அமைத்துள்ளார்கள். இதனால் ஆம்புலன்ஸ் இயக்கும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை கடப்பது குறித்து பதற்றம் அடைகிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவைஇல்லாத இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்