சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-11-09 13:01 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது பச்சைமலை. இங்கு செல்வதற்கு துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து பெருமாள் மலை அடிவாரம், கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு வழியாக அகலம் குறைந்த நெடுஞ்சாலைத்துறை சாலை செல்கிறது. கீரம்பூர் மற்றும் செங்காட்டுப்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ளே இருக்கும் சாலையை தவிர்த்து ஊருக்கு வெளியே உள்ள சாலையை அகலப்படுத்திக்கொடுத்தால் போக்குவரத்து எளிதாகும். குறிப்பாக அடிவாரம் முதல் கீரம்பூர் ஊர் ஆரம்பிக்கும் இடம் வரையிலும் கீரம்பூர் ஊர் முடியும் இடத்திலிருந்து செங்காட்டுப்பட்டி ஊர் ஆரம்பிக்கும் வரையிலும், செங்காட்டுப்பட்டி ஊர் முடியும் இடத்திலிருந்து மூலக்காடு வனத்துறை செக்போஸ்ட் வரை உள்ள 7 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைத்துறை சாலையை அகலப்படுத்தினால் போக்குவரத்து எளிதாகும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்