விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா கோசுகுண்டு அஞ்சல்முத்தார்பட்டி கிழக்கு தெருவில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீட்டின் உள்ளே வந்து விடுகிறது. சாலையும் மண் சாலையாக காணப்படுவதால் மழைகாலங்களில் சேறும், சகதியுமாக காட்சியளித்து நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கழிவுநீர் செல்ல முறையான வாருகால்வசதி இல்லை. மேற்கண்ட பிரச்சினைகளால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைகின்றர். எனவே இப்பகுதியில் வாருகாலுடன் கூடிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.