தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-10-23 11:41 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் நகரம் 24-வது வார்டு திருச்சி ரோடு சுந்தரபுரம் என்ற குடியிருப்பு பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை தற்போது மண் சாலையாக மாறிவிட்டது. இதனால் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்