விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி தெற்கு தெரு 4-வது வார்டில் உள்ள சாலை சேதமடைந்து இருப்பதால் மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் தவறி விழுந்து ஒரு சிலர் காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.