விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைக்கு போகும் வழியில் வராகசமுத்திரம் மற்றும் பெரியகுளம் என 2 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களின் நடுவில் கரைமேல் சாலை அமைக்கப்பட்டு நீண்ட காலங்களாக போக்குவரத்து நடந்து வருகிறது. தற்போது வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இந்த சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன்னர் சாலையின் ஓரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.