மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ரெயில்வே பாலம் கட்டும் பணியானது டி.வி.எஸ். நகர் பகுதியில் முடிவடைந்தும் ஜெய்ஹந்த்புரம் பகுதியில் பணி முடிவடையாமலும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாலத்தில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.