மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி 4-வது வார்டு ஆனையூர் அருகே கோசாகுளம், பெரியார் நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலையானது மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.