விருதுநகர் மாவட்டம் ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. மண் சாலையாக காணப்படுவதால் வழிநெடுகிழும் ஆங்காங்கே செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வழித்தடத்தில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.