பந்தலூர் தாலுகா மழவன் சேரம்பாடியில் இருந்து காவயலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலை செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ்கள் கூட விரைந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.