பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் பழுதடைந்த தார் சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் சீரமைக்கப்ப்டட சாலை மேடு பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சில சமயங்களில் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேடு, பள்ளமான சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.